"வாக்குறுதி" என்ற குறுந்திரைப் படம்...

 "வாக்குறுதி" என்ற இந்தக் குறுந்திரை ப்படத்தை... லிந்துலை பா.க. சுரேஷ் (Suresh Kandasamy) என்ற இளம் மலையகக் கலைஞன் எனது அபிப்பிராயத்தைக் கேட்டு எனக்கு பதிவிட்டுள்ளார். ஊடகங்களில் சேகரித்த.. பெருந்தோட்ட மக்களின் கொந்தளித்துக் குமுழியிடும் குமுறல்களையும் . பத்திரிக்கை செய்திகளையும். இரட்சகர்களின் சிம்மக் குரல்களையும் ஒளிச் சித்திரமாக்கி... மனிதாபிமானிகள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.. .. இந்த சிருஷ்டியை மலையக அரசியல் தலைவர்களுக்கும் "கூலித் தொழில்.. கூலி உயர்வு.. கேட்டுக்கொண்டிருக்கும் எண்ண த்துக்கப்பால்.. மாற்றுச் சிந்தனையாக... தோட்ட நிலங்களைத் தேடி சுய விவசாயத்தில் இறங்கும் சிந்தனையையும் கலசாரத்தையும் உருவாக்க முனையும் இளந் தொழிலாளர்களுக்கும் காணிக்கையாக்க விரும்புகிறேன்.." என்று சுரேஷ் ஆசை படுகின்றார்..! இது ஓர் உலக சினிமா..!





கருத்துகள் இல்லை: