பாக்கு வெட்டி...
-மு.சிவலிங்கம்
-

மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு ஓடினான். அதிபரை விசாரித்தான்.. ஆசிரியர்களை விசாரித்தான்.. அவர்கள் “ரெண்டு மணிக்கே பாடசாலை விட்டாச்சே..” என்று கைகளை விரித்தார்கள். அண்ணன் திரும்பி ஓடி வந்தான். நண்பர்களைக் கூட்டிக் கொண்டு தேடத் தொடங்கினான். இந்த ஊரில் இப்படி எத்தனையோ சிறுமிகள் காணாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. அபியின் தாயாரின் ஓலம் வானதிரக் கேட்டுக் கொண்டேயிருந்தது.. அக்கம் பக்கத்து வீடுகள் அல்லோ கல்லோலப் பட்டன. அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு நெடுஞ் சாலையிலிருந்து  காடு¸ மேடுகள்¸ செடி செத்தைகள் என்று தேடினார்கள். இளைஞர் கூட்டம் தங்கள் கிராமத்துப் பிரதேசம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள்.

எந்த வித அறிகுறியும் தென்பட வில்லை.

அந்திக் கருக்கல்… இருட்டியும்  விட்டது. அந்த சோகமான சூழலை இன்னும் துயரமாக்குவதாய்  மழையும் பெய்யத் தொடங்கியது. இனிமேல் எப்படி காடுகளில் தேடுவது..? இளைஞர்கள் சளைக்க வில்லை.. சிலர் எண்ணெய் பந்தங்களைக் கட்டிக் கொண்டு¸ கல் இடுக்குகள்¸ பாதையடி குழாய்கள்; என நுழைந்து நுழைந்து தேடினார்கள். சிலர் பஸ்ஸில் ஏறி அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று விசாரித்தார்கள். பாடசாலை மாணவி காண வில்லை என்பதால்¸ ஊரே திரண்டு  அமர்க்களப் பட்டது. தேடிக் களைத்தவர்கள்¸ அதிர்ச்சியோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி  நின்றார்கள்.


மேலும் படிக்க....

தொழிற்சங்க அரசியல்வாதிக்கு எதிராக தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்...
-மு.சிவலிங்கம்


உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரச பதவிகளை எதிர்நோக்கி தேர்தலில் ஈடுபடுவதில்லை. அந்நாடுகளில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்  அரசு பயப்படுவதில்லை. மாறாக தொழிற்சங்கங்களுக்கும்¸ தொழிற்சங்கவாதிகளுக்கு மட்டுமே பயப்படுகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சக்தி தொழிலாளரின் உழைப்பேயாகும். அவர்களின் நல உரிமைகளும்¸ வேதன உரிமைகளும் அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நாடு வளர்முக நாடாகவும்¸ முன்னேற்ற மடைந்த நாடாகவும் நிர்ணயிப்பது அந் நாட்டின் சகல துறையைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் உழைப்பேயாகும். ஆகவே¸ நாட்டின் நிமித்தம் தொழிலாளர்களின் சுக துக்கங்களுக்கான அதி விசேசமான பாதுகாப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒரு முக்கியமான சட்டம்தான் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடாதிருக்கும் தடைச் சட்டமாகும்.

   அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கவாதிகள் எத்தனித்தால்¸  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கிவிட முடியும். அந் நாட்டின் சகல இயக்கங்களையும் ஸ்தம்பிதமாக்கி விட முடியும். சந்தை பொருட்களின்¸ உள் நாட்டு உற்பத்திகளின் விலைவாசிகளை உயர்த்தி விட முடியும். ஓட்டுமொத்த குடி மக்களின் நுகர்வுகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிட முடியும். இந்த நிலைமைகள் ஏற்படாது இருக்கவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து¸  மேலை நாட்டு அரசுகள் செவி சாய்க்கின்றன..

மேலும் படிக்க....

பரியேறும் பெருமாள்...
  

சமூக எழுச்சியற்ற   ஒரு  கதாநாயகப் புரட்சி!

பா.ரஞ்சித்¸ மாரி செல்வராஜ் பார்வைக்கு…! 

- மு.சிவலிங்கம்


இந்தியாவில் உயர் சாதி என்போர் கீழ் சாதி என்போரை இவ்வளவு காலமும் ஒதுக்கி வைத்தனர். இன்று அம் மக்களை அவமானப் படுத்துவதிலும்¸ சித்திரவதை செய்வதிலும்;¸ கொன்று அழிப்பதிலும் வேகமாக முனைந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இக் கொடுமைகளை தினமும் காணக் கூடியதாக இருக்கிறது.

சினிமா ஊடகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் கலைத்துறை வேலைத் திட்டமாக இளம் டைரக்டர் பா.ரஞ்சித் செயல்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். ஆனால் சமீப காலமாக அவரது சாதிக்கெதிரான எதிர்ப்புக்  கோட்பாட்டு  சினிமா ¸  தயாரிப்பாளர்களின் வணிக வருமானத்தை  பெருக்குவதற்காக  மாறி வருவதை  அறிய முடிகிறது….

பரியேறும் பெருமாள் என்ற படத்தை ரஞ்சித் தயாரித்துள்ளார்.. மாரி செல்வராஜ் நெறி படுத்தியுள்ளார்.

காலனித்துவ காலத்தில்¸ பிரிட்டிஷ்  ஆட்சியில்  இந்தியப் பிரஜைகள் எல்லோருமே   சமமாகக்  கணிக்கப்பட்டிருந்தனர்..

சுதந்திர இந்தியாவின் தேச பிதாவாக கௌரவிக்கப்பட்ட எம்.கே. காந்தி  (  “மகாத்மா”) அவர்களே  தாழ்ந்த சமூகத்தினர் என்போரை “ஹரிஜன்" என்றும் கடவுளின் குழந்தைகள் என்றும் பெயர் சூட்டினார்  என்ற விமர்சனமும் உண்டு.   பின்னர் 'தலித்"  இனம் என்ற ஒரு சமூக அடையாளமும் அறிமுகப் படுத்தப்பட்டன. அதையொட்டி  தலித் இலக்கியங்கள்¸ தலித் படைப்பாளர்கள் என்ற அடையாளங்களையெல்லாம் தாழ்த்தப்பட்டோர் என்போரே தங்களுக்குத் தானே பெயர் சூட்டிக்  கொண்டனர்..

இந்திய குடிகள்¸;  இன்று வர்க்க ரீதியாகவோ¸ இன¸ மத  ரீதியாகவோ அன்றி¸  சக மனிதனோடு  கூட  மனிதனாகச் சேர்ந்து வாழ முடியாத சமூக அமைப்பை இந்தியா இன்று வரை கட்டிக் காத்து வருகிறது. ஒரு நாட்டின் இறையான்மை¸ அந் நாட்டு ஒவ்வொரு குடி மகனுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். இந்தியாவில் அந்த அரசியல் அம்சத்தை எதிர் பார்க்க முடியவில்லை.

நண்பர்  ரஞ்சித் ¸  கபாலி..  காலா...  போன்ற படங்களில் சாதித்துவ செயல்களை¸ அதற்கெதிரான சவால்களை    கற்பனாவாத புரட்சிக்காரர்கள்  மூலம்   காட்டி வந்துள்ளார். இன்று இவரது தயாரிப்பில் உருவான  பரியேறும் பெருமாளில்    தாழ்ந்த  இன மக்கள் என்று சொல்லப்படுபவர்களை படத்தில் அறிமுகப்படுத்தும் முறை¸ அம் மக்களை அவமதிப்பதாக இருக்கிறது. மனித இனத்தில் ஏதோ ஓர் வேறுபட்ட இனக்கூறுகளை அறிமுகப்படுத்துவதாக இருக்கிறது. 


மேலும் படிக்க....

மஞ்சள் கோடுகள்...
-  மு.சிவலிங்கம்

செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..!

“இன்னும் கொஞ்ச நேரம்மா..!”

“காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”

அம்மாவின் நச்சரிப்போடு செல்வி படுக்கைக்குப் போனாள்.

“கடவுளே..!  கடவுளே..! இந்த கொலஷிப் டெஸ்ட் வச்சானுங்களே பாவிக..! புள்ளைக மெழுகுவர்த்தியா உருகுதுக… ச்சே… ச்சே..!”  மஞ்சுளா வீட்டைக் கூட்டிக் கொண்டே முனு முனுத்தாள்.

மஞ்சுளா படுக்கைக்குப் போன மகளை  மீண்டும் கூப்பிட்டாள். பால் கலக்கிக் கொண்டு  ஓடினாள். மகள் குடித்து முடித்து ¸ அம்மாவுக்கு முத்தம் கொடுத்து விட்டு¸ போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள்.


சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு¸ பிள்ளைகளுக்கு காலையில் இடியப்பம் ¸ லெவேரியா செய்வதற்காக மாவை அவித்து வைக்கத் தயாரானாள். காலையில் இரண்டு பிள்ளைகளும்  இனிப்புடன் சாப்பிடவே விரும்புகின்றன. மஞ்சுளா சின்ன மகன் தூக்கத்தில் சினுங்குவதை ஓடிப் போய் பார்த்து விட்டு ஓடி வந்தாள்.


மேலும் படிக்க....