பஞ்சம் பிழைக்க வந்த சீமை (2nd Edition)
- பதிவிறக்கம் செய்ய (Download)....
- Online இல் வாசிப்பதற்கு ... "பஞ்சம் பிழைக்க வந்த சீமை" - மு.சிவலிங்கம்
எழுத்தாளர் திரு.மு.சிவலிங்கம் | திரு.சர்தார் |கதைப்பமா | நம் தமிழ் | 11/02/2021
ஆளுமையுடன் ஓர் உரையாடல். மு.சிவலிங்கம் - மேமன்கவி
ஆளுமையுடன் ஓர் உரையாடல்
மலேசிய இயல் பதிப்பகம் நடத்திய இலங்கை தமிழ் எழுத்தாளர் இலக்கிய அறிமுக நிகழ்வு
மலேசிய இயல் பதிப்பகம் நடத்திய இலங்கை தமிழ் எழுத்தாளர் இலக்கிய அறிமுக நிகழ்வு 8-12-2020
மீண்டும் பனை முளைக்கும்? - மு.சிவலிங்கம்
மீண்டும் பனை முளைக்கும்?
-மு.சிவலிங்கம்
வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார்.
செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது.
கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள்... நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப் போய் முடிவது...? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித் தெருவுக்குள் நுழைவது...?
“வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா...?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்க விருக்கும் கூட்டம் இவரது பின்னால் நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம் தயங்கித் தயங்கி நின்றுக் கொண்டிருந் தார்கள்.
கேட்டிருப்பாயோ காற்றே...! - மு.சிவலிங்கம்
கேட்டிருப்பாயோ காற்றே...!
- மு.சிவலிங்கம்
அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும் போதுதான் சுய உணர்வு வந்தது... நடப்பது உண்மை சம்பவமே என்று... விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்...
சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... இனி... தமிழர்களோடும் சேர்ந்து வாழ நினைத்த நம்பிக்கை அற்றுப் போனதாய் அவர் மனம் விரக்தியடைந்தது. கடைசி காலத்தில் இனத் தோடு இனமாய் சேர்ந்து வாழலாம்... என்ற நப்பாசையும் இன்றோடு விட்டுப் போனது...
***
வேலாயுதம் மாஸ்டர் காலி மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தில் அடிப்பட்டு, கட்டியத் துணியோடு மனைவி, மக்களை இழுத்துக் கொண்டு, செட்டிக்குளத்துக்கு வந்துச் சேர்ந்தவர். குருவி மாதிரி நாற்பது வருசங்கள் உழைத்துச் சேமித்தப் பணத்தில் வீடு கட்டி, தோட்டம், துறவு தேடி, இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் வளர்த்தெடுத்த இறுமாப்பில் வாழ்ந்துக் கொண்டிருந்த போதுதான் 77ம் ஆண்டு ஆடிக் கலவரம் முதற் கட்டத்தை ஆடி முடித்தது...
இரவு ஏழு மணி கூட ஆகவில்லை.
மாஸ்டர் வீட்டுக் கதவு உதைக்கப்பட்டது... பின்னர் உடைக்கப்பட்டது... பெற்ரோல் கேனை வீட்டுக்குள் விசிறினான் ஒருவன்...
உத்தியோகம் புருஷ லட்சணம்..? -மு.சிவலிங்கம்
உத்தியோகம் புருஷ லட்சணம்..?
-மு.சிவலிங்கம்
எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது... எனது சந்தேகம்... அதற்கான கேள்விகள்... யாவற்றையும் விட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.
அவன்... அந்த பி...ச்...சை...கா...ர…ன்… இன்னும் நான் இருக்கும் அந்த பஸ்ஸில் பாடிக் கொண்டுதான் இருக்கிறான்... பாட்டு இன்னும் முடிய வில்லை...
அவன் பஸ்ஸில் ஏறியவுடன்... தன்னை பிரயாணிகள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டதே வினோதமாக இருந்தது... அவன் தன் தாய் மொழியான சிங்களத்தில் துள்ளியமாகச் சொன்னான். அவனது வார்த்தைகள் நன்றாக மனனம் செய்துக் கொள்ளப்பட்டவைகளாகும்... ஒவ்வொரு பஸ்ஸிலும் அந்த ஆரம்ப உரையை அவன் ஆற்றுவான் போலிருக்கிறது...
“நோனா வருனி... மஹத்வருனி..., ஒப யன கமன சுப கமனக் வேவா... சுமன சமன் தெவி பிஹிட்டய்...! மம பொரு, வஞ்ச்சா , ஹொரக்கம், கரன்னே... நே... மம மினீ மரன்னே... நே... ஒபே கமன சுப கமனக் வென்னட்ட மம கீத்தயக் காயனா கரமி... மட்ட சுளு ஆதாரயக் தெய் கியா பலாபொரோத்து வெனவா...”(நான் பொய், களவு, சூது, கொலை செய்து வாழ்பவனல்ல... உங்கள் பயணம் சுபமானதாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு பாடலை பாடுகிறேன்... உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...)
அவன் பாடுவதற்கு முன்பு வாயினால் இசையை (இண்டர்லூட்) எழுப்பினான்... “டொட டொட டொங்... டொட டொட டொங்...” தோளில் தொங்கிய கிட்டார் கருவியை மீட்டினான்... அந்தப் பாடல் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது... சிங்கள பைலா சக்கரவர்த்தி என அழைக்கப்படும் எம். எஸ் . பெர்னான்டோ பாடிய துள்ளல் இசை அது...
இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும்..
இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும். ஐ.நா. பொதுச் சபை 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பிரகடனப்படுத்தியது. எந்த நாட்டு ஆட்சியும்¸ தன்னாட்டு ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்கள்¸ மதங்கள்¸ மொழிகள்¸ தேசிய நிலை ஆகியவற்றின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி 47/135 இலக்கம் கொண்ட தீர்மாணத்தின் படி¸ இன்று இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
மல்லிகை சி.குமார்..
மல்லிகைக்கு இந்தாண்டு பிறந்த தின பரிசு ஒரு பிரபல புத்தக வெளியீட்டகத்திலிருந்து காத்திருக்கின்றது..! அத்துடன் அதற்கான பொற்கிழியும் கிடைக்கவுள்ளது..! மலையக மக்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் வேடதாரிகளின் முகமூடிகளைக் கிழித்துக் காட்டும் "வேடத்தனம்" என்ற சிறுகதைத் தொகுப்பே இந்த பரிசாகும்.!... மல்லிகை சி.குமார் சிலரைப்போன்று இலக்கியம் "பண்ண" வந்தவரல்ல..! மலையக சமூக முக்கியத்துவம்...சமூக ஆதங்கமே இவரது எழுத்தாகும்.மலையக அரசியல் தொழிற்சங்க சீரழிவுகளை இலக்கியமாக்கியுள்ளவர்களுள் குமார் மிக முக்கியமானவர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.! கொடகே நிறுவனத்துக்கு மலையகப் படைப்பாளர்கள் சார்பாக நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகவேண்டும்..!
மு.சிவலிங்கம்
விசாரணையும்… அசுரனும்.... - மு.சிவலிங்கம்
ஊரடங்கு சட்டம்... வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இந்த விமர்சனக் கட்டுரை!
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும்... (April 14)
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும். ((April 14)) இந்த இனிய நாளில் அவரது புத்தகம் ஒன்றை நினைவு கூறுவோம். "Annihilation of caste" சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தை 1936 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி டாக்டர் அம்பேத்க ர் அவர்களே வெளியிட்டார். உலகில் 95 விதமான வாசகர்கள் இன் நூலை விரும்பி உள்ளார்கள்.
அந்த நல்ல ஆரம்பம்....
THAT GOOD BEGINNING..! அந்த நல்ல ஆரம்பம்.....