பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதிய காற்று என்ற இலங்கை தமிழ்த் திரைப்படம் 1975 ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வெற்றி வாகை சூடியது. அதற்கு முன்பதாக தோட்டக்காரி, பொன்மணி, மஞ்சள் குங்குமம், குத்து விளக்கு, கடமையின் எல்லை, வாடைக் காற்று, நிர்மலா, காத்திருப்பேன் உனக்காக, சர்மிளாவின் இதய ராகம், டெக்ஸி டிரைவர், ஹம்லட், நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி, கோமாளிகள் போன்ற படங்களை வரிசைபடுத்தாமல் இங்கு தந்துள்ளேன்.

Pudhiya Kaatru Mu Sivalingamஇப் படக்கதை தோட்ட மக்களை மையமாகக் கொண்டதாகும். தோ ட்டத் தொழிலாளர்கள் வீடற்று வாழும் நிலைமையை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. ஒரே அறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்ந்து வரும் கலாச்சார சீரழிவையும், மனித உரிமை மீறல்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் இக் கதை எழுதப்பட்டது.ஒரு வகையில் இக் கதை நாட்டு மக்களும், அரசும், தோட்டக் கம்பெனி நிர்வாகங்களும் அறிந்துக் கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்கும் ஓர் பிரசார படமாக உருவாக்கப்பட்டது. கதையோட்டமும், படத்துக்கான நோக்கமும் சிதைந்து விடாமல் இருப்பதற்காக இப்படத்தின் டைரக்டர் ராமநாதன் அவர்கள் செயல்பட்டார். இவர் மாத்தளையைச் சேர்ந்தவர். அவருக்கு ஆலோசனை வழங்குபவனாக, உதவியாளனாகவும் அத்தோடு ப்ரொடக்ஷன் மெனேஜராகவும் நான் செயற்பட்டேன்.


படப்பிடிப்பு பண்டாரவளை, ஐஸ்லபி, மல்வத்தை, ஊவா ஹைலன்ஸ், யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டங்களில் நடைபெற்றது. பூவை செங்குட்டுவனும், கவிஞர் கண்ணதாசனும், மற்றும் இலங்கைக் கவிஞர் சாது ஹமீதும் பாடல்களை எழுதியிருந்தார்கள்.
‘மேதினம்.. மேதினம். மேதினி எங்கும் மேதினம்' மண்டிய காடு விலங்குகளோடு' மருண்டு கிடந்தது மலையகம்.. அதை கண்டு திருத்தி கழனிகள் தந்தது தமிழினம்’ என்ற இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசனும், டூயட் பாடல்களை பூவை செங்குட்டுவனும், “மலை நாட்டில் ஒரு மாற்றம் வர வேண்டும் புதிய காற்று” என்ற பாடலை சாது என்ற புனை பெயர் கொண்ட ஹமீதும் எழுதியிருந்தார்கள்.
பாடல்களை பாடகர் முத்தழகு, கலாவதி சின்னசாமி, சுஜாத்தா அத்தனாயக்க, வவுனியா பாலச்சந்திரன், மற்றும் சிலரும் பாடியிருந்தார்கள்.
மலையகத்தின் இயற்கை காட்சிகளை அழகுற கெமராவுக்குள் கலைஞர் லெனி கொஸ்தா கொண்டு வந்திருந்தார். வேறு எந்த இலங்கைப் படங்களையும் விட புதிய காற்று படம் வெற்றி பெற்றதற்கு மலையகத்தின் இயற்கை காட்சிகளும், மலையகத் தொழிலாளர் பற்றிய உருக்கமான கதையமைப்புமே காரணமாகும். இப் படம் காண்பிக்கப்படும் போது, நாடு முழுவதிலும் தமிழ், சிங்கள ரசிகர்களின் நல்ல வரவேற்பு கிடைத்தது. வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பட மாளிகைகளில் வாழை மரங்கள், தென்னோலை தோரணங்கள் கட்டி வரவேற்பு செய்திருந்தனர். தயாரிப்பாளர் வி.பி.கணேசனுக்கு இப் படம் பெரும் புகழைத் தேடித் தந்தது. இந்த உத்வேகத்தின் காரணமாக அவர் “நான் உங்கள் தோழன்”, “நாடு போற்ற வாழ்க” போன்ற இரு படங்களையும் அடுத்தடுத்து தயாரித்தார். கலைஞர் கலைச்செல்வன், நான் உங்கள் தோழன் படத்துக்கு திரைக் கதை வசனம் எழுதி, கதாநாயகி அப்புத்தளை சுபாசினிக்கு தந்தையாக பாகமேற்று நடித்திருந்தார். இப் படத்தில் வானொலி, மேடை நாடக சினிமா நடிகரான ஜவாஹிர் முக்கிய பாகமேற்று நடித்திருந்தார். நாடு போற்ற வாழ்க படத்துக்கு எஸ்.என்.தனரத்தினம் திரைக் கதை வசனம் எழுதி நடித்திருந்தார். இம் மூன்று படங்களின் தகவல்கள் யாவும் நினைவுகள் மூலமே எழுதப்பட்டுள்ளன. தகவல் அறிந்தவர்கள் மேலதிகத் தகவல்கலைத் தந்துதவலாம்.

தொழிற்சங்க அரசியல்வாதிக்கு எதிராக தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்...
-மு.சிவலிங்கம்


உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரச பதவிகளை எதிர்நோக்கி தேர்தலில் ஈடுபடுவதில்லை. அந்நாடுகளில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்  அரசு பயப்படுவதில்லை. மாறாக தொழிற்சங்கங்களுக்கும்¸ தொழிற்சங்கவாதிகளுக்கு மட்டுமே பயப்படுகின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் சக்தி தொழிலாளரின் உழைப்பேயாகும். அவர்களின் நல உரிமைகளும்¸ வேதன உரிமைகளும் அரசினால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு நாடு வளர்முக நாடாகவும்¸ முன்னேற்ற மடைந்த நாடாகவும் நிர்ணயிப்பது அந் நாட்டின் சகல துறையைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் உழைப்பேயாகும். ஆகவே¸ நாட்டின் நிமித்தம் தொழிலாளர்களின் சுக துக்கங்களுக்கான அதி விசேசமான பாதுகாப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதில் ஒரு முக்கியமான சட்டம்தான் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடாதிருக்கும் தடைச் சட்டமாகும்.

   அரசியல் கலப்பற்ற தொழிற்சங்கவாதிகள் எத்தனித்தால்¸  ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடமாக்கிவிட முடியும். அந் நாட்டின் சகல இயக்கங்களையும் ஸ்தம்பிதமாக்கி விட முடியும். சந்தை பொருட்களின்¸ உள் நாட்டு உற்பத்திகளின் விலைவாசிகளை உயர்த்தி விட முடியும். ஓட்டுமொத்த குடி மக்களின் நுகர்வுகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிட முடியும். இந்த நிலைமைகள் ஏற்படாது இருக்கவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து¸  மேலை நாட்டு அரசுகள் செவி சாய்க்கின்றன..

மேலும் படிக்க....

சட்டங்களுக்குட்பட்ட  பிரஜாவுரிமையும்¸
திணைக்களத்துக்குட்பட்ட ஆள்பதிவும்

நீக்கப்பட வேண்டும்.
(யாப்பு சீர்திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணை)

- மு.சிவலிங்கம் -  முன்னாள் ம.ம.மு. செயலாளர் நாயகம்


புதிய அரசியல் யாப்பு திருத்தத்துக்கான தனி நபர் பிரேரணையாக முன் வைக்கப்பட்ட எனது பத்து பிரேரணைகள் பற்றி இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.. 

01. அரசியலமைப்பின் பிரகடனத்துக்கப்பால் 1948 முதல் 2009 வரையில் அமுலில் இருக்கும்  பதினொரு வகை பிரஜா உரிமைச் சட்டங்கள் நீக்கப்படல் வேண்டும். 

இப் பிரேரணை பற்றிய விளக்கமாவது -:  1948 ம் ஆண்டு 18 ம் இலக்கப் பிரஜா உரிமைச் சட்டம்¸ மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தது. 1946 ம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு தயாரித்த அறிக்கையும் இச் சட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. இச் சட்டத்தால் இந்திய வம்சாவளி  தமிழர்கள் நாடற்றவராகினர். இதன் பின்னர் 1949 ம் ஆண்டு 48 ம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு குடியுரிமையை இழந்தவர்களுக்கு  வாக்குரிமை வழங்கும் உரிமையும் மறுக்கப்பட்டது. 


மேலும் படிக்க....