எழுத்தாளர் திரு.மு.சிவலிங்கம் | திரு.சர்தார் |கதைப்பமா | நம் தமிழ் | 11/02/2021



 
https://www.facebook.com/NumTamilRadio/videos/174273740828288
https://www.facebook.com/Murugan.Sivalingam.M


 ஆளுமையுடன் ஓர் உரையாடல்

மலையகத்தின் முக்கிய படைப்பாளியான மு.சிவலிங்கம் அவர்களுடான ஓர் உரையாடல் - மேமன்கவி



https://www.facebook.com/memon.kavi/videos/4141623039185650
https://www.facebook.com/Murugan.Sivalingam.M


 மீண்டும் பனை முளைக்கும்?
-மு.சிவலிங்கம்


வத்தளையிலிருந்து பஸ்ஸில் புறப்பட்ட புதுமை நாடன் அஞ்சு லாம்பு சந்தியில் இறங்கி நின்றார். 

செட்டித் தெருவுக்குள் நுழைய வேண்டும். அதற்காக சந்தியைக் கடக்க வேண்டும். சந்தி, இடக்கு, முடக்கு என்று வாகன நெரிசலில் நிறைந்து வழிகிறது. 


கொஞ்சம் குருட்டுத்தனமாகக் குறுக்கே நுழைந்தால், தவளை மாதிரி நசுக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவான்கள்... நாடன் ரொம்பவும் முன் ஜாக்கிரதைக்காரர். இருந்தாலும், இவ்வளவு வாகனங்களும் என்றைக்குப் போய் முடிவது...? இவர் என்றைக்கு சந்தியைக் கடந்து, செட்டித் தெருவுக்குள் நுழைவது...?


 “வாழ்க்கையில் நான் சகித்துக் கொள்ளாத பொறுமையா...?” புதுமை நாடன் தனது கைப்பையைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, வேட்டியைச் சரி செய்தபடி, பேவ்மன்டில் நின்றார். வீதியைக் கடக்க விருக்கும் கூட்டம் இவரது பின்னால் நின்றது. அங்கே எவருக்குமே குறுக்கே நுழைவதற்குப் பயம் தயங்கித் தயங்கி நின்றுக் கொண்டிருந் தார்கள். 


மேலும் படிக்க....

கேட்டிருப்பாயோ காற்றே...! 

- மு.சிவலிங்கம்


இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து, தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது... இப்போது... தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு நெருப்புவைத்து, அடித்துத் துரத்துவதைப் பார்த்த வேலாயுதம் மாஸ்டரின் கண்கள் நம்ப மறுத்தன... 


அச் சம்பவம் கனவில் நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவரின் சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துத் தள்ளும் போதுதான் சுய உணர்வு வந்தது... நடப்பது உண்மை சம்பவமே என்று... விழுந்தவர் எழுந்து மெதுவாக நடந்தார்... 


சக தமிழனிடம் அப்படி அடி வாங்குவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் அடிபட்ட வலியை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... இனி... தமிழர்களோடும் சேர்ந்து வாழ நினைத்த நம்பிக்கை அற்றுப் போனதாய் அவர் மனம் விரக்தியடைந்தது. கடைசி காலத்தில் இனத் தோடு இனமாய் சேர்ந்து வாழலாம்... என்ற நப்பாசையும் இன்றோடு விட்டுப் போனது... 


***

வேலாயுதம் மாஸ்டர் காலி மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தில் அடிப்பட்டு, கட்டியத் துணியோடு மனைவி, மக்களை இழுத்துக் கொண்டு, செட்டிக்குளத்துக்கு வந்துச் சேர்ந்தவர். குருவி மாதிரி நாற்பது வருசங்கள் உழைத்துச் சேமித்தப் பணத்தில் வீடு கட்டி, தோட்டம், துறவு தேடி, இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் வளர்த்தெடுத்த இறுமாப்பில் வாழ்ந்துக் கொண்டிருந்த போதுதான் 77ம் ஆண்டு ஆடிக் கலவரம் முதற் கட்டத்தை ஆடி முடித்தது... 


இரவு ஏழு மணி கூட ஆகவில்லை. 


மாஸ்டர் வீட்டுக் கதவு உதைக்கப்பட்டது... பின்னர் உடைக்கப்பட்டது... பெற்ரோல் கேனை வீட்டுக்குள் விசிறினான் ஒருவன்... 



மேலும் படிக்க....

 உத்தியோகம் புருஷ லட்சணம்..? 

-மு.சிவலிங்கம்


அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை . சமுதாயத்தில் சக மனிதனிடம் கையேந்தி வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத் தாழ்ந்து வீழ்வதற்கு ஒரு பிரஜையின் நிலைமை ஏன் மாறுபடுகின்றது...? பிச்சைக்காரர்களாக ஒரு பிரிவினர் மாறிவிட்ட பிறகும், அவர்கள் மத்தியிலும், பல உயர்வு, தாழ்வு கொண்ட பிரிவினர் வேறுபட்டுக் காணப்படுகின்றனரே...? 

எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது... எனது சந்தேகம்... அதற்கான கேள்விகள்... யாவற்றையும் விட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன். 


அவன்... அந்த பி...ச்...சை...கா...ர…ன்…  இன்னும் நான் இருக்கும் அந்த பஸ்ஸில் பாடிக் கொண்டுதான் இருக்கிறான்... பாட்டு இன்னும் முடிய வில்லை... 


அவன் பஸ்ஸில் ஏறியவுடன்... தன்னை பிரயாணிகள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டதே வினோதமாக இருந்தது... அவன் தன் தாய் மொழியான சிங்களத்தில் துள்ளியமாகச் சொன்னான். அவனது வார்த்தைகள் நன்றாக மனனம் செய்துக் கொள்ளப்பட்டவைகளாகும்... ஒவ்வொரு பஸ்ஸிலும் அந்த ஆரம்ப உரையை அவன் ஆற்றுவான் போலிருக்கிறது... 


“நோனா வருனி... மஹத்வருனி..., ஒப யன கமன சுப கமனக் வேவா... சுமன சமன் தெவி பிஹிட்டய்...! மம பொரு, வஞ்ச்சா , ஹொரக்கம், கரன்னே... நே... மம மினீ மரன்னே... நே... ஒபே கமன சுப கமனக் வென்னட்ட மம கீத்தயக் காயனா கரமி... மட்ட சுளு ஆதாரயக் தெய் கியா பலாபொரோத்து வெனவா...”(நான் பொய், களவு, சூது, கொலை செய்து வாழ்பவனல்ல... உங்கள் பயணம் சுபமானதாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு பாடலை பாடுகிறேன்... உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...) 


அவன் பாடுவதற்கு முன்பு வாயினால் இசையை (இண்டர்லூட்) எழுப்பினான்... “டொட டொட டொங்... டொட டொட டொங்...” தோளில் தொங்கிய கிட்டார் கருவியை மீட்டினான்... அந்தப் பாடல் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது... சிங்கள பைலா சக்கரவர்த்தி என அழைக்கப்படும் எம். எஸ் . பெர்னான்டோ பாடிய துள்ளல் இசை அது... 


மேலும் படிக்க....



தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது நிகழ்ச்சியில் குடும்பத்துடன்... மற்றும்

உடப்பு வீரசொக்கன்¸ மலரன்பன்¸ பேராசிரியர் சி.மௌனகுரு¸ மற்றும் கண்டி இராமன் ஆகியோருடன்..

-மு.சிவலிங்கம்




 கொடகே சாகித்திய விழாவில்....

யாழ் நங்கை அன்னலட்சுமி ராஜதுரை¸ K.S.சிவகுமாரன்¸ வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பத்மா சோமகாந்தன்¸ எரிமலை நாவலுக்கு விருது பெற்ற தி.ஞானசேகரன் ஆகியோருடன் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீனும் முசியும்....










இன்று உலக சிறுபான்மை இனங்களின் உரிமைத் தினமாகும். ஐ.நா. பொதுச் சபை 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பிரகடனப்படுத்தியது. எந்த நாட்டு ஆட்சியும்¸ தன்னாட்டு ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்கள்¸ மதங்கள்¸ மொழிகள்¸ தேசிய நிலை ஆகியவற்றின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ம் திகதி 47/135 இலக்கம் கொண்ட தீர்மாணத்தின் படி¸ இன்று இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

( On 18 December 1992 the United Nations General Assembly adopted a resolution recognizing the rights of persons belonging to national or ethnic, religions and linguistic, minorities resolution 47/135 of 18 th December 1992. MIHR Commemorates the day on minorities on 18 th December the day of the adoption of the declaration. )

இலங்கையர்களான¸ தேசிய சிறுபான்மை இனங்களான வடக்கு¸ கிழக்கு¸ மாகாணத் தமிழர்கள்¸ மலையகத் தமிழர்கள்¸ இஸ்லாமியர்கள் ஆகிய இனங்களின் தேசிய உரிமைகள் இன்று வேறு வேறாக உள்ளன.
இவர்களுள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய உரிமைகள் யாவும் மனித உரிமை மீறல்களாகவே உள்ளன.
இவர்கள் தேசிய நிலைக்கு உறுத்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். இவர்கள் நிலமற்ற குடி மக்களாகவே இருக்கின்றனர். அதனால் சுய பொருளாதார நிலையிழந்து¸ தங்கள் வாழ்வாதாரத்துக்கு சக மனிதரை அண்டி வாழ வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்விடம்¸ கிராமங்கள் என்ற தேசியத்தை இழந்து நிற்கின்றது. இவர்கள் கிராமப் புற மக்களாகவன்றி¸ தோட்டப்புற மக்களாகவே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். (Plantation People)
இவர்களது குடியுரிமை¸ சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. 1948 ம் ஆண்டு ஏவி விடப்பட்ட சட்டங்கள் முதல் 2009 ம் ஆண்டு வரை 12 சட்டங்கள் இவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏனைய மக்கள் போலல்லாது பதிவுப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுள்ளனர். பதிவு பிரஜைக்கும் வம்சாவளிப் பிரஜைக்கும் வேறுபாடுகள் இல்லையென்று அரசியல் யாப்பு அறிவித்தாலும் ஏன் இம்மக்களை இன்னும் பதிவு பிரஜைகளாகக் கணித்து வைத்திருக்கின்றது என்பதே எமது உரிமைக்கான கேள்வியாகும்.

இவர்கள் வாழும் பிரதேசங்கள் அரசுக்குரியவை. அரசு இவர்களது வாழ்விடங்களை கிராம மயமாக்க விரும்புவதில்லை. நாட்டில் உள்ளுராட்சிக்குள் இவர்களது வாழ்விடங்கள் உள் வாங்கப்பட வில்லை. இவர்களது உட்கட்டமைப்புக்கு உள்ளுராட்சி நிதி வழங்கப்படுவதில்லை. இன்று வரை (Estate sector) தோட்ட பிரதேசம் என்றே இவர்களது வாழ்விடம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்றும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதிக்குட்பட்ட அல்லது ஆலோசனைக்குட்பட்ட அல்லது சம்மதத்துக்குட்பட்ட விதத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் செய்ய முடியுமென புதிய திருத்தச் சட்டங்கள் அறிவிக்கின்றன. தோட்டங்கள் உள்ளுராட்சிக்கு உள்வாங்கப்படாது¸ தடையாகவிருந்த 33 வது உறுப்புரை நீக்கப்பட்டிருந்தாலும்¸ இந்த பாகுபாடு தொடர்ந்து இருக்கின்றது.
இவர்கள் இன்ற வரை இலங்கைத் தமிழராகவோ¸ மலையகத் தமிழராகவோ தேசிய அடையாளத்தைப் பெறாமல்¸ இந்திய வம்சாவளி என்ற நாமத்துக்குள் இருக்கின்றனர். இவர்களது தேசிய அடையாளத்தை இன்று வரை உறுதிபடுத்திக் கொள்ளாதபடியால்¸ இறுதியாக கணக்கெடுக்கப்பட்ட 1981-2011 வரையிலான 30 ஆண்டுகளுக்கான புள்ளி விபரத்தில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.! இந்த குளறுபடியான கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர் 22 லட்சம் என்றும்¸ இஸ்லாமியர் 18 லட்சம் என்றும்¸ மலையகத் தமிழர் எட்டே 8 லட்சம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் தத்தளிப்பு நிலையில் குடிசன மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டாலும்¸ வடக்கு¸ கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் கணிப்பீட்டிலேயே உள் வாங்கப் படுகின்றனர். இதற்கு காரணம்¸ குடிசன தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் இவர்களை இந்தியத் தமிழர்கள் என்றே பதிவேட்டில் அடையாளமிட்டு வைத்திருக்கின்றது.!

இந்த மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளா விட்டால்¸ உலக சனத் தொகை பதிவேட்டிலும் கூட இடம் பெற மாட்டார்கள்.! தேசிய அடையாளமில்லாத அநாமதேயங்களாகவே வாழ வேண்டிவரும்!

அடுத்து ஒரு முக்கியமான தகவல்¸ சில மலையக அரசியல் செயற்பாட்டாளர்கள்…. மற்றும் புத்திமான்கள் பலரும்¸ மலையக மக்களின் மேல் திணிக்கப்பட்ட பிரஜா உரிமை சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன¸ என்று வாய்ப் பேச்சாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்¸ இச் சட்டங்கள் யாவும் செயலிழக்கப்பட்டுள்ளன என்ற சட்டத் தகவல் எந்த அரச குறிப்பேட்டிலும் வெளியிடப் பட்டுள்ளதாக அறிய முடியவில்லை. சமூகத்தின் பால் அக்கறை கொண்ட எவராவது ஒரு சட்டவாதி¸ இந்த சந்தேகத்துக்கு தெளிவை தர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய டிசம்பர் 18 ம் திகதியிலிருந்து 2020 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் திகதி வரை மலையக மக்கள் தங்களது மறுக்கப்பட்டு வரும் தேசிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமைக் குரலை எழுப்புவார்களா? உரிமைப் போராட்டங்கள் நடத்துவார்களா..? என்பதே இன்றைய தினத்தில் நாங்கள் அனுஷ்டிக்கும் ஏக்கப் பெறுமூச்சாகும்……………

- மு.சிவலிங்கம்



மல்லிகைக்கு இந்தாண்டு பிறந்த தின பரிசு ஒரு பிரபல புத்தக வெளியீட்டகத்திலிருந்து காத்திருக்கின்றது..! அத்துடன் அதற்கான பொற்கிழியும் கிடைக்கவுள்ளது..! மலையக மக்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் வேடதாரிகளின் முகமூடிகளைக் கிழித்துக் காட்டும் "வேடத்தனம்" என்ற சிறுகதைத் தொகுப்பே இந்த பரிசாகும்.!... மல்லிகை சி.குமார் சிலரைப்போன்று இலக்கியம் "பண்ண" வந்தவரல்ல..! மலையக சமூக முக்கியத்துவம்...சமூக ஆதங்கமே இவரது எழுத்தாகும்.மலையக அரசியல் தொழிற்சங்க சீரழிவுகளை இலக்கியமாக்கியுள்ளவர்களுள் குமார் மிக முக்கியமானவர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.! கொடகே நிறுவனத்துக்கு மலையகப் படைப்பாளர்கள் சார்பாக நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகவேண்டும்..!

மு.சிவலிங்கம்







 ஊரடங்கு சட்டம்... வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இந்த விமர்சனக் கட்டுரை!

விசாரணையும்… அசுரனும்....

பல பிரபல்யமான இலக்கியவாதிகளின் நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டன.. சில படங்களே வெற்றியடைந்தன. கல்கியின் பார்த்தீபன் கனவு¸ கள்வனின் காதலி¸ தி.ஜானகிராமனின் மோகமுள்¸ அகிலனின் பாவை விளக்கு¸கொத்தமங்களம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள்¸ மகரிஷியின் புவனா ஒரு கேள்வி குறி¸ ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள்¸ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்¸ போன்ற இன்னும் சில படங்களை சொல்லலாம். இன்று ஆட்டோ ஓட்டுனராகத் தொழில் புரியும் நாவலாசிரியர் மு.சந்திரகுமார் “லாக்கப்" நாவலை எழுதியிருக்கிறார்



அரசாங்கங்கள் வரம்பு மீறிய அதிகாரங்களை பொலீஸ் திணைக்களங்களுக்கு கொடுப்பதும் பொலீஸ்காரர்கள் அப்பாவிகளின்மேல் நடத்தும் அராஜகங்கள் கொடுரமான சித்திரவதைகள்.. கண்டுபிடிக்க முடியாத கொலை..கொள்ளை வழக்குகளை அப்பாவிகளை வைத்து நடத்தி முடிப்பதும் போன்ற பொலிஸ் பயங்கரவாதம் பற்றிய கதை... புத்தகம் வெளிவந்த போதே பலரின் கவனத்தையும் கவர்ந்தது. "விசாரணை" என்ற பெயரில் 'லாக்கப்" நாவல் வெற்றிமாறனின் நெறியாளுகையில் வெற்றிப் படமாகியது. தமிழ் சினிமாவே பாராட்டி மகிழ்ந்தது. எழுத்தாளர் சந்திரகுமார்.. “அரசியல் தெரியாமல் இலக்கியம் படைக்க முடியாது..அரசியல் இல்லாமல் இலக்கியம் எடுபடாது" என்ற நிலைப்பாடு கொண்டவர். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன்
கூட்டுக்குப்பின்னர்..

நாவலாசிரியர் பூமணி எழுதிய "வெக்கை: நாவலையும் வெற்றிமாறன் “அசுரன்" என்ற பெயரில் படமாக்கினார். படம் பெரும் வெற்றியைக் கண்டது.இப்படத்தின் மூலம் என்டடெயின்மன்ட் நடிகராகவே பாவிக்கப் பட்ட தனுஷை மிகப் பெரும் குணச்சித்திர நடிகராக வெளியில் கொண்டு வந்ததில் வெற்றிமாறனும் வெற்றிடைந்தார்.

தனுஷும் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர் மத்தியிலும் வியப்படையும் வகையில் பாராட்டப்பட்டார். அசுரன் கதை தமிழ்நாட்டில் சக மனித இனத்தைச் சேர்ந்தவனை சாதியால் தாழ்த்தி அவன் வாழுகின்ற நிலத்தையும் பறித்துக்கொள்ளும் “மேட்டுக்குடிகள்' என்போரின் ஆதிக்கத்துக்கெதிராக எழுச்சிக்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாகும்..உலகத்திலேயே இந்தியா என்ற ஒரேயொரு நாடுதான் மனித இனத்தில் சாதி என்ற.. ஒரு வேற்றுமையை உண்டாக்கி.... அவமானப்படுத்தி.. துன்பப்படுத்தி ஒருபிரிவு மனித இனத்தை வாழ விடாமல் கொரோனா வைரஸைப் போன்று அழிக்க முடியாத சக்தியாக இருந்து வருகின்றது....சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்குவதற்கு முன் வரும் தீய சக்திகளை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எதிர் நிலைப்பாட்டை மிகத் துணிச்சலோடு இப்படம் காட்டியுள்ளது.

நாவலாசிரியனின் கருத்து நிலை வழுவாமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதி திமிர் கொண்ட ஒருவன் செருப்பணிந்து பாடசாலைக்குச்சென்ற மாணவியை அடித்து உதைத்து அவள் செருப்பைக் கழற்றச்செய்து அவள் தலையில் சுமக்கச் செய்து தெருத் தெருவாக இழுத்துச்செல்கிறான். அவள் செருப்பணிவதால் அவளுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று அச்சிறுமியை மிரட்டுகின்றான். தகவல் அறிந்த தனுஷ் அவனையும் அவனது கூட்டத்தினரையும் அடித்து நொறுக்கும் சண்டை காட்சியை மக்கள் ஆரவாரம் செய்து ரசிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது. !. என் அனுபவத்தில் சினிமா சண்டையை எம்ஜியாருக்குப்பிறகு இந்தப் படத்தில்தான் ரசித்தேன்!

சாதிக்கொடுமைகளுக்கு எதிராக சண்டையும் சில சந்தர்ப்பங்களில் கொலையும் கூட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் அறியக் கூடியதாகவிருக்கின்றது. இவ்வாறான இலக்கியப் படைப்புக்கள் சினிமா ஊடகத்துக்குள் வெற்றிமாறன் போன்ற சமூகவாதிகளினால்தான் கோலோச்ச முடியும்.. இப்படங்களின் காரணகர்த்தாக்களான மு.சந்திரகுமார்.... பூமணி... தனுஷ்.. வெற்றிமாறன் ஆகிய அனைவருக்கும் மக்களுக்கான சினிமாவை நேசிப்பவர்களின் பாராட்டுக்கள்...!

-மு.சிவலிங்கம்


அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும். ((April 14)) இந்த இனிய நாளில் அவரது புத்தகம் ஒன்றை நினைவு கூறுவோம். "Annihilation of caste" சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தை 1936 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி டாக்டர் அம்பேத்க ர் அவர்களே வெளியிட்டார். உலகில் 95 விதமான வாசகர்கள் இன் நூலை விரும்பி உள்ளார்கள்.

.
Annihilation of caste is a prolific work by Dr. B.R.Ambedkar. It encapsulates the ideas of a rebel of how caste and religion oppress people,socially,morally and economically.



இந்த புத்தகத்தோடு இன்னுமொரு புத்தகத்தையும் அறிவோம். பேராசிரியர் கான்சா அய்லயா "நான் ஏன் இந்துவாக இல்லை ?" ("Why I am not a Hindu?") என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த நூல் இந்துத்துவம், பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் பற்றிய விமர்சனமாகும். பேராசிரியர் ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பணிப்புரிந்தவர். இவர் தலித்பகுஜன விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராவார்.

இந்த இரண்டு நூல்களும் மனித இனத்தைப் படித்து கொள்ளும் பொக்கிஷங்களாகும்.உலகிலேயே மனித இனத்தை சாதிகளால் பிரித்து வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா ஆகும்!.அதன் செயலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நூல்களும் உலக கவனத்தை பெற்றவையாகும். இப்புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளனவா என்பதை அறியமுடியவில்லை.

-மு.சிவலிங்கம்

 THAT GOOD BEGINNING..! அந்த நல்ல ஆரம்பம்.....

...உலகத் தமிழர் பேரமைப்பு தொடக்க விழா மாநாடு 2002 ஜூலை மாதம் சென்னையில் நடைப்பெற்றது.சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர்..செயலாளராகிய நாங்கள் இருவரும் கலந்துக்கொண்டோம். "ஈழப்போராட்டம்"பற்றி திரு.பெ.சந்திரசேகரன் அவர்களும்¸ "மலையகத்தமிழரின் தேசிய நிலை" பற்றி நானும் உரையாற்றினோம்.
படங்களில்.. மாநாட்டுத் தலைவர் பழ.நெடுமாறன்.. திருவாளர்கள்..: தொல்.திருமாவளவன்.. பாரதிராஜா... மாநாட்டுச் செயலாளர் பேரா.சுப.வீரபாண்டியன்(நிற்பவர்) ஆகியோருடன்....
இத்தகவலைதமிழ்நாடு தேவக்கோட்டை இலங்கை மலர்மன்னன் (வறக்காப்பொல) தம்பிராஜா அவர்கள் கேட்டுக்கொண்டதற்காகவும். ஆரம்பகால கட்சியின் நண்பர்களுக்காகவும் பதிவிடுகின்றேன்....