மல்லிகை சி.குமார்..

மல்லிகைக்கு இந்தாண்டு பிறந்த தின பரிசு ஒரு பிரபல புத்தக வெளியீட்டகத்திலிருந்து காத்திருக்கின்றது..! அத்துடன் அதற்கான பொற்கிழியும் கிடைக்கவுள்ளது..! மலையக மக்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையோடு தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் வேடதாரிகளின் முகமூடிகளைக் கிழித்துக் காட்டும் "வேடத்தனம்" என்ற சிறுகதைத் தொகுப்பே இந்த பரிசாகும்.!... மல்லிகை சி.குமார் சிலரைப்போன்று இலக்கியம் "பண்ண" வந்தவரல்ல..! மலையக சமூக முக்கியத்துவம்...சமூக ஆதங்கமே இவரது எழுத்தாகும்.மலையக அரசியல் தொழிற்சங்க சீரழிவுகளை இலக்கியமாக்கியுள்ளவர்களுள் குமார் மிக முக்கியமானவர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.! கொடகே நிறுவனத்துக்கு மலையகப் படைப்பாளர்கள் சார்பாக நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகவேண்டும்..!

மு.சிவலிங்கம்







கருத்துகள் இல்லை: