"மலையகத் தமிழ்ச் சிறுகதைகளில் மத்திய தர வர்க்கம்" - மு.சிவலிங்கம்

 "மலையகத் தமிழ்ச் சிறுகதைகளில் மத்திய தர வர்க்கம்" விரிவுரையாளர்.எம்.எம்.ஜெயசீலன்.....

பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் அவர்களின் மணிவிழா மலரில் இலக்கியவியல் பகுதியில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது. சமகாலத்தில் பேராதனை பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த இரண்டு இளம் விரிவுரையாளர்களான திருவாளர்கள்.... பெ.சரவணகுமார்...

எம்.எம்.ஜெயசீலன் ஆகியோர் சமகால மலையக இலக்கியம் பற்றி... குறிப்பாக சிறுகதை..நெடுங்கதை இலக்கியங்கள் பற்றி இவர்களது புதியப் பார்வைகளில் மிகக் காத்திரமான ஆய்வுகளை எழுதி வருகின்றனர்.தொடர்ந்து இவர்களுக்கு இலக்கிய மேடைகள் கிடைத்து வருகின்றன.. சமீபத்தில் திரு.பெ.சரவணகுமார் "மலையக இலக்கியத்தில்எதிர்ப்பு இலக்கியம்" என்ற பார்வையில் எழுதியிருந்தார்.

விமரிசன எழுத்தில் இது ஓர் புதிய கண்ணோட்டமாகும். சமூக எதிரிகளுக்கெதிராக குரல் கொடுக்கும் கதைகளை இக்கட்டுரை கோடிட்டு காட்டுகின்றது. இந்த மணிவிழா மலரில் திரு.ஜெயசீலன் இதுவரை எவரும் பேசாத பொருளான மலையக சமூகத்தின் மத்தியதர வகுப்பினர்களைப்பற்றி எழுதப்பட்ட பல சிறுகதைகளைத் தொட்டுக் காட்டியுள்ளார். கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்துவிட்டவர்கள் சொந்த சமூகத்தைவிட்டு நழுவி... ஒதுங்கி... மறைந்து வாழ்பவர்களை தோலுரித்துக்காட்டியுள்ள பல படைப்புக்களை ஜெயசீலன் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்..! ஏனைய சமூகங்களில் உயர்ந்த நிலைமைக்குச் சென்றுவிட்டவர்கள் தங்களது சமூகத்தின் அரசியல்... சமூக...பொருளாதார வாழக்கையோடு பங்கு கொள்கின்றனர். மலையகத்தில் மட்டுமே சமூகத்தைவிட்டு புலம் பெயர்ந்து விடுகின்றனர்..!சமூக நிகழ்வுகளில் அழைக்கப்பட்டாலே விருந்தினராக வந்து போகின்றனர்..!

இவர்களைப்பற்றி...இவர்களது சமூகப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராய முன்வரும் ஜெயசீலனின் இவ்வகை விமரிசன எழுத்து மலையக இலக்கியத்தில் புதிய செல்நெறியாகும்.....உங்களின் புதிய பார்வைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெயசீலன்..!

- மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: