அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும்... (April 14)

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்றாகும். ((April 14)) இந்த இனிய நாளில் அவரது புத்தகம் ஒன்றை நினைவு கூறுவோம். "Annihilation of caste" சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தை 1936 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி டாக்டர் அம்பேத்க ர் அவர்களே வெளியிட்டார். உலகில் 95 விதமான வாசகர்கள் இன் நூலை விரும்பி உள்ளார்கள்.

.
Annihilation of caste is a prolific work by Dr. B.R.Ambedkar. It encapsulates the ideas of a rebel of how caste and religion oppress people,socially,morally and economically.



இந்த புத்தகத்தோடு இன்னுமொரு புத்தகத்தையும் அறிவோம். பேராசிரியர் கான்சா அய்லயா "நான் ஏன் இந்துவாக இல்லை ?" ("Why I am not a Hindu?") என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த நூல் இந்துத்துவம், பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் பற்றிய விமர்சனமாகும். பேராசிரியர் ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பணிப்புரிந்தவர். இவர் தலித்பகுஜன விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராவார்.

இந்த இரண்டு நூல்களும் மனித இனத்தைப் படித்து கொள்ளும் பொக்கிஷங்களாகும்.உலகிலேயே மனித இனத்தை சாதிகளால் பிரித்து வைத்திருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா ஆகும்!.அதன் செயலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நூல்களும் உலக கவனத்தை பெற்றவையாகும். இப்புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளனவா என்பதை அறியமுடியவில்லை.

-மு.சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: