மஞ்சள் கோடுகள்...

மஞ்சள் கோடுகள்...
-  மு.சிவலிங்கம்

செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..!

“இன்னும் கொஞ்ச நேரம்மா..!”

“காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?”

அம்மாவின் நச்சரிப்போடு செல்வி படுக்கைக்குப் போனாள்.

“கடவுளே..!  கடவுளே..! இந்த கொலஷிப் டெஸ்ட் வச்சானுங்களே பாவிக..! புள்ளைக மெழுகுவர்த்தியா உருகுதுக… ச்சே… ச்சே..!”  மஞ்சுளா வீட்டைக் கூட்டிக் கொண்டே முனு முனுத்தாள்.

மஞ்சுளா படுக்கைக்குப் போன மகளை  மீண்டும் கூப்பிட்டாள். பால் கலக்கிக் கொண்டு  ஓடினாள். மகள் குடித்து முடித்து ¸ அம்மாவுக்கு முத்தம் கொடுத்து விட்டு¸ போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள்.


சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு¸ பிள்ளைகளுக்கு காலையில் இடியப்பம் ¸ லெவேரியா செய்வதற்காக மாவை அவித்து வைக்கத் தயாரானாள். காலையில் இரண்டு பிள்ளைகளும்  இனிப்புடன் சாப்பிடவே விரும்புகின்றன. மஞ்சுளா சின்ன மகன் தூக்கத்தில் சினுங்குவதை ஓடிப் போய் பார்த்து விட்டு ஓடி வந்தாள்.


மேலும் படிக்க....