பரியேறும் பெருமாள்..

பரியேறும் பெருமாள்...
  

சமூக எழுச்சியற்ற   ஒரு  கதாநாயகப் புரட்சி!

பா.ரஞ்சித்¸ மாரி செல்வராஜ் பார்வைக்கு…! 

- மு.சிவலிங்கம்


இந்தியாவில் உயர் சாதி என்போர் கீழ் சாதி என்போரை இவ்வளவு காலமும் ஒதுக்கி வைத்தனர். இன்று அம் மக்களை அவமானப் படுத்துவதிலும்¸ சித்திரவதை செய்வதிலும்;¸ கொன்று அழிப்பதிலும் வேகமாக முனைந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இக் கொடுமைகளை தினமும் காணக் கூடியதாக இருக்கிறது.

சினிமா ஊடகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் கலைத்துறை வேலைத் திட்டமாக இளம் டைரக்டர் பா.ரஞ்சித் செயல்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். ஆனால் சமீப காலமாக அவரது சாதிக்கெதிரான எதிர்ப்புக்  கோட்பாட்டு  சினிமா ¸  தயாரிப்பாளர்களின் வணிக வருமானத்தை  பெருக்குவதற்காக  மாறி வருவதை  அறிய முடிகிறது….

பரியேறும் பெருமாள் என்ற படத்தை ரஞ்சித் தயாரித்துள்ளார்.. மாரி செல்வராஜ் நெறி படுத்தியுள்ளார்.

காலனித்துவ காலத்தில்¸ பிரிட்டிஷ்  ஆட்சியில்  இந்தியப் பிரஜைகள் எல்லோருமே   சமமாகக்  கணிக்கப்பட்டிருந்தனர்..

சுதந்திர இந்தியாவின் தேச பிதாவாக கௌரவிக்கப்பட்ட எம்.கே. காந்தி  (  “மகாத்மா”) அவர்களே  தாழ்ந்த சமூகத்தினர் என்போரை “ஹரிஜன்" என்றும் கடவுளின் குழந்தைகள் என்றும் பெயர் சூட்டினார்  என்ற விமர்சனமும் உண்டு.   பின்னர் 'தலித்"  இனம் என்ற ஒரு சமூக அடையாளமும் அறிமுகப் படுத்தப்பட்டன. அதையொட்டி  தலித் இலக்கியங்கள்¸ தலித் படைப்பாளர்கள் என்ற அடையாளங்களையெல்லாம் தாழ்த்தப்பட்டோர் என்போரே தங்களுக்குத் தானே பெயர் சூட்டிக்  கொண்டனர்..

இந்திய குடிகள்¸;  இன்று வர்க்க ரீதியாகவோ¸ இன¸ மத  ரீதியாகவோ அன்றி¸  சக மனிதனோடு  கூட  மனிதனாகச் சேர்ந்து வாழ முடியாத சமூக அமைப்பை இந்தியா இன்று வரை கட்டிக் காத்து வருகிறது. ஒரு நாட்டின் இறையான்மை¸ அந் நாட்டு ஒவ்வொரு குடி மகனுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். இந்தியாவில் அந்த அரசியல் அம்சத்தை எதிர் பார்க்க முடியவில்லை.

நண்பர்  ரஞ்சித் ¸  கபாலி..  காலா...  போன்ற படங்களில் சாதித்துவ செயல்களை¸ அதற்கெதிரான சவால்களை    கற்பனாவாத புரட்சிக்காரர்கள்  மூலம்   காட்டி வந்துள்ளார். இன்று இவரது தயாரிப்பில் உருவான  பரியேறும் பெருமாளில்    தாழ்ந்த  இன மக்கள் என்று சொல்லப்படுபவர்களை படத்தில் அறிமுகப்படுத்தும் முறை¸ அம் மக்களை அவமதிப்பதாக இருக்கிறது. மனித இனத்தில் ஏதோ ஓர் வேறுபட்ட இனக்கூறுகளை அறிமுகப்படுத்துவதாக இருக்கிறது. 


மேலும் படிக்க....