மதுர கீதம்...

மதுர கீதம்...
-மு.சிவலிங்கம்


அந்த மலைப்பாறையில் அமர்ந்தபடி ஒரு வெள்ளை மண்ணாங்கட்டியினால் கோடுகள் கீறிக் கொண்டிருந்தான் சீனி. அவனது இதயத்தடாகத்தில் கொந்தளித்த எண்ணக் குமிழிகள் இப்படி பலவாறு அவனது வாழ்வுச் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடும் மலைச்சரளைகளென உதிர்த்துக் கொண்டிருந்தன.... 

அந்த¸ பெரிய குப்பைமேடு அந்த லயத்துக்கோடியில் தான் இருக்கிறது. பத்து வீடுகளை வரிசையாக்கிக் கொண்டிருக்கும் லயத்தின் குப்பைக் கூளங்களெல்லாம்¸ அந்தக்கோடிப்புற குழியை நிறைத்து மேடாக்கிவிட்டிருந்தன. அந்தக் குப்பை மேட்டின் ஜீவசத்துக்களையெல்லாம் உண்டு கொழுத்து அதையே ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து¸ பூத்துக்குலுங்கி¸ காய்த்துக் கனிந்து கொண்டிருக்கிறது ஒரு கொய்யாமரம். 

அந்த கொய்யாமரத்தின் உச்சிக்கிளையில் குரங்கைப் போல உட்கார்ந்து கால்களை ஆட்டி வரட்டுச் சத்தமிட்டுப் பாடிக் கொண்டிருக்கிறான் சீனி. 

'ஆத்துக்கு அந்தப்புறம் காக்கா! - நான் 
கல்யாணம் கட்டப்போறேன் சோக்கா!”

கொய்யாமரத்தின் எதிர்ப்பள்ளத்தில் ஓர் ஓடை ஓடையின் மறுகரையில் ஒரு லயம்¸ அது ஆத்து லயம் அங்கிருந்தும் அதே பாட்டு மோகனராகத்தில் தென்றலோடு மிதந்து வருகிறது. மாரிக்குட்டி¸ ‘கீச்சுக்’ குரலில் அழகு காட்டி பாட்டோடு ஆட்டமும் போடுகிறாள். 


மேலும் படிக்க....

கருத்துகள் இல்லை: